சீனாவின் அறிவிப்பு தொடர்பில் நாணய நிதியத்திடமிருந்து உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 3

30 Jan, 2023 | 05:27 PM
image

(எம்.மனோசித்ரா)

கடன் மறுசீரமைப்பிற்கு சீனா வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியத்தினால் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது , கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

எனினும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சீனாவின் அறிவிப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் அரசாங்கத்திற்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பத்தை விட தற்போது சாதகமான நிலைமையே காணப்படுகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:43:12
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24