சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக்கில் 135 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை-அமைக்கும் பணிகளை ஆரம்பித்தது இந்தியா

Published By: Rajeeban

30 Jan, 2023 | 10:45 AM
image

சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் லடாக் எல்லையில் முகாமிட்டிருந்த வீரர்களுக்கு கழுதைகள் மூலமாக உணவு, ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது எல்லைப் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. 1980-களில் எல்லைப் பகுதியை அடைய 12 முதல் 15 நாட்களாகின. இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரையிலான 3,488 கி.மீ. எல்லைப் பகுதிகளில் ரூ.15,477 கோடி செலவில் 2,088 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயற்சிக்கும் லடாக் பகுதியில் சாலை உள்கட்டமைப்பு பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு லடாக் எல்லையில் சாலை உள்கட்டமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

கடந்த 2021-ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் புதிய பாலம் திறக்கப்பட்டது. இப்போது 24 மணிநேரத்தில் லடாக் எல்லை பகுதியை சென்றடைய முடிகிறது.

அதோடு லடாக் எல்லையில் புதிதாக 37 ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 4 விமான தளங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் லடாக்கின் டெம்சாக் பகுதியில் இருந்து சூசோல் பகுதியில் அமைந்துள்ள பான்காங் ஏரி வரை 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக எல்லை சாலை அமைப்பு அண்மையில் ஒப்பந்தம் கோரியது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

பான்காங் ஏரியுடன் இணைப்பு

இதுகுறித்து எல்லை சாலைஅமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது. லடாக் எல்லையில் மக்கள் வசிக்கும் கடைசி கிராமம் டெம்சாக். இது கடல் மட்டத்தில் இருந்து 19,000 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த கிராமத்துக்கு பிறகு எல்லைக்கோடு வரை மக்கள் குடியிருப்பு கிடையாது. இந்த எல்லைப் பகுதியில் சாலை வசதி திருப்திகரமாக இல்லை.

இதை கருத்தில் கொண்டு டெம்சாக்கில் இருந்து தென்கிழக்கு லடாக் பகுதியான சூசோல் வரை 135 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை பான்காங் ஏரியின் தென்பகுதியை இணைக்கும். ஏரியின் ஒரு பாதி இந்தியாவிடமும் மற்றொரு பாதி சீனாவிடமும் உள்ளது.

பான்காங் ஏரி மற்றும் அதை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயற்சிப்பதும் அவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடிப்பதும் வாடிக்கையாக உள்ளது. சீன ராணுவம் தனது எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. அந்த நாட்டைவிட இருமடங்கு அதிகமாக இந்திய பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ரூ.400 கோடி செலவில் புதிதாக அமைக்கப்படும் டெம்சாக் - சூசோல் இடையிலான 135 கி.மீ. நெடுஞ்சாலை சிந்து நதியை ஒட்டி அமைக்கப்படும். இது சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தை கடந்து செல்லும்.

மிக குறுகிய காலத்தில் சாலை பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன்படி அடுத்த 2 ஆண்டுகளில் புதிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வரும். இதன்பிறகு பான்காங் ஏரிப்பகுதிக்கு இந்திய ராணுவ வீரர்கள் எளிதில் சென்றடைய முடியும். இவ்வாறு எல்லை சாலை அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48
news-image

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி ஏற்றுமதியாளராக...

2023-03-21 16:58:46
news-image

இந்திய எதிர்ப்பு சக்திகள் நாட்டிற்கு எதிராக...

2023-03-21 16:58:24
news-image

இந்தியா - மாலைதீவுகள் 4வது பாதுகாப்பு...

2023-03-21 15:05:49
news-image

இந்திய நாடாளுமன்றத்தின் மாடியில் இருந்தவாறு எதிர்க்கட்சிகள்...

2023-03-21 14:17:18
news-image

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர்...

2023-03-21 13:24:59
news-image

கிரைமியாவில் ரஷ்ய ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக உக்ரேன்...

2023-03-21 12:19:30
news-image

92 வயதில் 5 ஆவது திருமணம்...

2023-03-21 11:03:42
news-image

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும்...

2023-03-21 10:48:33
news-image

பிரதமர் என்றால் இந்தியா என்று அர்த்தம்...

2023-03-21 10:40:37