எம்மில் சிலர் இரவு நேரத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று விழிப்பு நிலை ஏற்படும். அதன் போது உடல்களை அசைக்க இயலாத நிலையும், மார்பக பகுதியில் அழுத்துவது போன்ற உணர்வும் உண்டாகும். இவை மிகக் குறைந்த கால அவகாசமே நீடிக்கும். இதனைத் தான் மருத்துவர்கள் ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க நிலை பக்கவாதம் என குறிப்பிடுகிறார்கள். வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி 20 வீத மக்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
சிலருக்கு இத்தகைய பாதிப்பு உறங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படுவதால்.., பதட்டமடைந்து எழுந்து நிற்க முயற்சி செய்து கீழே விழுந்து விடுகிறார்கள். சிலர் இதன் போது நெஞ்சகப் பகுதியில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டினை ஹாலுசினேசன் எனப்படும் உருவ கற்பித்தத்தை கனவு நிலையில் கண்டு பதட்டமடைவர். இத்தகைய பாதிப்பு நார்கோலெப்ஸி எனப்படும் நரம்பியல் மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக உண்டாகிறது.
மேலும் எம்முடைய மூளை பகுதியில் உறக்கநிலை, விழிப்பு நிலை போன்றவற்றை கட்டுப்படுத்தும் சுரப்பிகளில், ஒரக்சின் எனப்படும் ரசாயனத்தின் அளவில் சமசீரற்றத்தன்மை ஏற்படுவதன் காரணமாக இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. மேலும் இத்தகைய பாதிப்புள்ளவர்கள் பகல் பொழுதில் உறங்குவதும், அதிக நேரம் உறங்குவதையும் காணலாம். மேலும் சிலருக்கு பகல் பொழுதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது உறக்க நிலை பாதிப்பு ஏற்பட்டு, இத்தகைய இடையூறு ஏற்படக்கூடும்.
இதற்கு நோயாளியின் சுவாசப் பாதை, நுரையீரல் இயங்கு திறன், அவர்களின் உறக்க நேரம், உறங்கும் நிலை, விழிக்கும் நிலை.. உள்ளிட்டவைகளை பிரத்யேகமாக பரிசோதிப்பது மற்றும் மூளை நரம்பியல் செயல்பாட்டு திறனறி பரிசோதனை ஆகியவற்றின் மூலம் துல்லியமாக அவதானித்து பாதிப்பின் தன்மையை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப முழுமையான நிவாரண சிகிச்சையை மருந்து, மாத்திரைகளின் மூலம் வழங்குவர்.
டொக்டர் சீனிவாஸ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM