(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கு இதுவரை அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடனான வர்த்தமானி அறிவிப்பு, அச்சிடுவதற்காக இதுவரை அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்படவில்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கை ஆரம்பித்திருப்பதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM