கிழக்கு ஜெருஸலேம் நகரில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலாளி இஸ்ரேலிய படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு ஜெருஸலேமில் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அந்நகரில் இன்று மீண்டும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கிழக்கு ஜெருஸலேத்தைச் சேர்ந்த 13 வயதானவர் என, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என அடையாளப்படுத்தியுள்ளார் எனவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்குக் கரையின் ஜெனின் நகர அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினரின் முற்றுகையின்போது 9 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
அதன்பின், கிழக்கு ஜெருஸலேமில் யூத வழிபாட்டுத் தலமொன்றுக்கு வெளியே நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலை நடத்திய 21 வயதான பலஸ்தீன இளைஞன் இஸ்ரேலிய படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM