நமது நிருபர்
கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டிரான் அலஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களிலும், கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலும், கடவுச்சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் அமைக்கப்படும்.
எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகங்களுக்குச் சென்று உயிரியல் தரவுகள் மற்றும் புகைப்படங்களைக் கொடுத்தால் கடவுச்சீட்டை முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இணையத்தில் பதிவு செய்து பல வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்
உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும், இலத்திரனியல் அட்டை கொண்ட கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM