(எம்.மனோசித்ரா)
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹம்மட்டை பதவி விலகுமாறு வலியுறுத்தி தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட எஸ்.பி.திவாரத்னவிற்கும் குறுஞ்செய்தியூடாக மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த உறுப்பினர்கள் இருவருக்கும் தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, குற்றப்புலனாய்வு பிரிவினால் (சி.ஐ.டி.) இது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவாரத்ன மற்றும் கே.பி.பி.பத்திரண ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 18 ஆம் திகதி தொலைபேசியூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தற்போது மீண்டுமொரு உறுப்பினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் எஸ்.பி.திவாரத்ன மற்றும் எம்.எம்.மொஹம்மட் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவாவிற்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய குறித்த இரு உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM