சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 3

29 Jan, 2023 | 09:29 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்றிலிருந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் , சுதந்திர தினத்தன்றும் கொழும்பில் வாகன போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தி , வீதிகளை மூடுதல் மற்றும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் நேற்று முதல் அதிகாலை 5 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை விசேட வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தினம் வரை இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறையிலிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வாகன போக்குவரத்தினை மட்டுப்படுத்தல்

காலிமுகத்திடல் வீதி, காலி முகத்திடல் சுற்று வட்டத்திலிருந்து என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் வரை மற்றும் சைத்திய வீதி பிரதேசம் வரை போக்குரத்து மட்டுப்படுத்தப்படும்.

கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்ட திசைக்கு மற்றும் கொள்ளுபிட்டி புகையிரத நிலைய வீதிக்கு பிரவேசித்தல் , புனித மைக்கல் சுற்று வட்டத்தில் காலி வீதி பகுதிக்கு பிரவேசித்தல் , ரொட்டுன்டா சுற்று வட்டத்திலிருந்து காலி வீதி திசைக்கு பிரவேசித்தல் , செரமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ.சுற்று வட்ட திசைக்கு பிரவேசித்தல் மட்படுத்தப்பட்டுள்ளது.

யோர்க் வீதியிலிருந்து இலங்கை வங்கி மாவத்தைக்கு பிரவேசித்தல் , யோர்க் வீதியிலிருந்து செத்தம் வீதிக்கு பிரவேசித்தல், யோர்க் வீதியிலிருந்து முதலிகே மாவத்தைக்கு பிரவேசித்தல் , யோர்க் வீதியிலிருந்து பாரொன் ஜயதிலக மாவத்தைக்கு பிரவேசித்தல்மட்படுத்தப்பட்டுள்ளது.

காண் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்திலிருந்து வை.எம்.பி.ஏ. சுற்று வட்ட திசைக்கு பிரவேசித்தல் , செனோர் சந்தியிலிருந்து ஒக்கொட் மாவத்தை, சி.டி.ஓ. சந்திக்கு பிரவேசித்தல் , காமினி சுற்று வட்டத்திலிருந்து டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தைக்கு பிரவேசித்தல், கொம்பனித்தெருவிலிருந்து ரீகல் சந்திக்கு பிரவேசித்தல் மட்படுத்தப்பட்டுள்ளது.

மாகன் மாகர் மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை சந்தியிலிருந்து காலி முகத்திடல் மற்றும் பாலதக்ஷ மாவத்தைக்கு பிரவேசித்தல் , காலி வீதி பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து கொள்ளுபிட்டி திசைக்கு பிரவேசித்தல், கடற்கரை வீதி பம்பலப்பிட்டி புகையிரத பாதை சந்தியிலிருந்து கொழும்பிற்கு பிரவேசித்தல் , தும்முல்ல சந்தியிலிருந்து பௌத்தாலோக்க மாவத்தை ஊடாக ஆர்.ஏ.டி. மெல் மாவத்தைக்கு பிரவேசித்தல் , ஆனந்த குமாரசிங்க மாவத்தை, மல்பார சந்தியிலிருந்து லிபர்டி சுற்றுவட்ட திசைக்கு பிரவேசித்தல் மற்றும் லிபர்டி சுற்றுவட்டத்தின் புனித மைக்கல் சுற்றுவட்ட திசைக்கு பிரவேசித்தல் மட்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட வீதிகள் மூடப்படும் போது அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் போது அந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் போக்குவரத்து உத்தியோகத்தர்களின் ஆலோசனைப்படி பயணம் செய்ய முடியும். அத்தோடு குறித்த வீதிகளில் நெறிசலை தவிர்ப்பதற்காக சாரதிகள் மற்றும் பொது மக்கள் கீழ் குறிப்பிடப்படும் மாற்று வீதிகளை பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பஸ், இலகு வாகனங்கள்

காலி வீதியிலிருந்து கோட்டை, புறக்கோட்டை பகுதிக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து தெற்கிற்கு திரும்பி பௌத்தாலோகமாவத்தை, தும்முல்ல சந்தி, தேஸ்டன் வீதி ஊடாக செல்ல முடியும்.

கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து தெற்கிற்கு திரும்பி, லிபர்ட் சுற்று வட்டம், தர்மபால மாவத்தை ஊடாக கோட்டை, புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.

ஒல்கொட் வீதி, கார்மிக வித்தியாலய சந்தி, சங்கராஜ மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி மருதானை பால சந்தி, காமினி சுற்று வட்டம் ஊடாக கோட்டை, புறக்கோட்டையிலிருந்து வாகனங்கள் வெளியேற முடியும்.

ஏனைய கனரக வாகனங்கள்

வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையிலிருந்து தெற்கிற்கு திரும்பி பழைய ஹெவ்லொக் வீதி, மாயா சுற்று வட்டம், ஹெவ்லொக் வீதியூடாக கோட்டை, புறக்கோட்டை திசைக்கு பயணிக்க முடியும்.

ஒல்கொட் மாவத்தை ஊடாக கார்மிக வித்தியாலய சந்தியில் சங்கராஜ மாவத்தை பஞ்சிகாவத்தை வீதி, மருதானை பால சந்தி, காமினி சுற்று வட்டம், டீ.பி.ஜாயா மாவத்தை ஊடாக கோட்டை, புறக்கோட்டையிலிருந்து வெளியேற முடியும் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53