13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி - கிரியெல்ல

Published By: T. Saranya

29 Jan, 2023 | 09:30 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

13 ஆவது திருத்தம் இன்றும் அரசியலமைப்பில் காணப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தின் கீழ் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டிடவுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மாகாணசபைகளை அனைத்து தரப்பும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனை ஏற்றுக் கொண்டமையின் காரணமாகவல்லவா தேர்தலில் போட்டியிட்டனர்? தற்போது தேர்தலுக்காக புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ளமையால், இனவாதத்தைத் தூண்டுவதே இலகுவான விடயமாகும். எனவே தான் அதனை செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை எந்த வகையிலும் தேர்தலில் தாக்கம் செலுத்தாது. தேர்தலை நடத்துவதற்கான உரிமை தேர்தல் ஆணைக்குழுவிடமே காணப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானதாகும். இதற்கு எவராலும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையான வாக்குரிமையை எந்தவொரு நிறுவனத்தினாலும் பறிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03