போதைவஸ்து விற்பனை மற்றும் பாவனைக்கு எதிரான கண்டன பேரணியொன்று நேற்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.
வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த இந்த கண்டனப் பேரணி அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.அப்துர் ரஹ்மான் அஸ்ஹரி தலைமையில் இடம்பெற்றது.
ஜும்மா தொழுகையை தொடர்ந்து, இப்பேரணி செம்மண்ணோடை குபா ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய விளையாட்டு மைதானம் வரை சென்றது.
'போதையற்ற கிராமம் ஒழுக்கமுள்ள இளைஞர் சமூகம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டார, சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளில் ஈடுபடும் நபர்களின் சமூக, சமய ரீதியான எவ்வித செயற்பாடுகளிலும் பொதுமக்கள் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM