ஜே.வி.பி.யின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் ஆர்ஜன்டீனாவைப் போன்ற நிலைமையே இலங்கைக்கு ஏற்படும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Nanthini

27 Jan, 2023 | 09:52 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும். அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று ஜே.வி.பி. கூறுகின்றது. அவ்வாறெனில், அதற்கான மாற்றுவழி என்ன என்பதையும் அவர்கள் முன்வைக்க வேண்டும். 

அதனை விடுத்து குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும். 

அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், நட்பு நாடுகளாக காணப்படுகின்ற போதிலும், இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து கூட எம்மால் ஒத்துழைப்புக்களை பெற முடியாது. சட்ட ரீதியாக அந்த நாடுகளுக்கு எம்மால் உதவ முடியாது.

எனவே, கடன் நிலைபேற்றுத் தன்மையை பேணுவதற்கு அதற்குரிய பொருளாதார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

அதன் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதோடு, வரவு - செலவு திட்டமும் முன்வைக்கப்பட்டது. 

இதனை அடிப்படையாக கொண்டே இந்தியாவும் கடன் மறுசீரமைப்புக்கு எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்தது.

நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்ற போதிலும், அவர்களின் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. உதாரணமாக, வருமான வரி 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான மாற்று வேலைத்திட்டம் எம்மிடமுள்ளது. எமது ஆட்சியில் நிச்சயம் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமானபோதே சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றிருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன்...

2023-03-28 14:15:37
news-image

சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம்...

2023-03-28 14:16:44
news-image

கட்டுநாயக்கவில் கைதான இரு பங்களாதேஷ் பிரஜைகள்...

2023-03-28 19:45:08
news-image

17ஆவது சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா...

2023-03-28 19:40:05
news-image

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை...

2023-03-28 14:05:43
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் :...

2023-03-28 16:24:49
news-image

சிறுவர் இல்லங்களை கண்காணிக்க நடவடிக்கை -...

2023-03-28 13:51:37
news-image

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு...

2023-03-28 17:24:11
news-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம்...

2023-03-28 17:23:23
news-image

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் பிரசுரித்த பெண்...

2023-03-28 17:08:41
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து...

2023-03-28 17:19:46
news-image

கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே...

2023-03-28 16:28:03