(இராஜதுரை ஹஷான்)
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் போலி செய்திகள் வெளியாகுகின்றமை அவதானிக்க முடிகிறது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகவும், ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சுயமாக பதவி விலகல் அல்லது பதவி விலகியதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படும் கடிதத்தின் பிரதிகள் ஏதும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தடையில்லாமல் முன்னெடுப்பார்கள்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் போலி செய்திகள் வெளியாகுகின்றமை அவதானிக்க முடிகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM