யாழில் மீற்றர் வட்டி விவகாரம் : கடனாளிகளை அடித்து துன்புறுத்திய நபர் கைது

Published By: Nanthini

27 Jan, 2023 | 12:28 PM
image

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீள வசூலிப்பதற்காக கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று (26) மாலை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

குறித்த நபர் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணியொன்றுக்கு அழைத்துவந்து, கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளி வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. 

தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. 

அதனை தொடர்ந்து மீற்றர் வட்டிக்கு பணத்தை வழங்கிவிட்டு,  பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்து துன்புறுத்தும் இருபதுக்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அந்த காணொளிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) காரில் பயணித்தவரை வாகனத்தால் மோதி கொலைசெய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரிடம் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்துகிற சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது. 

அத்துடன் அவர்கள் மருதனார்மடம் சந்தைக்கு அண்மையில் உள்ள தோட்டக்காணிக்கு கடன் பெற்றவர்களை அழைத்து, அங்கே பலரை அடித்து துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வருவதாக கூறப்படுகிறது. 

இந்த கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதோடு,  பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்கச் செல்கிறபோதெல்லாம் அவர்களை அந்த அதிகாரி திருப்பி அனுப்பிவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த காணொளிகளில் இடம்பெற்றுள்ள துன்புறுத்தல் சம்பவங்கள் ஒன்றரை வருடத்துக்கு முன்பாக நடந்திருக்கின்றன. தற்போது அந்தக் குழுவுக்குள் முரண் ஏற்பட்டுள்ளதால், இது பற்றிய பல காணொளிகள் வெளியாகியுள்ளன. 

எனினும், துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்களால் எந்த முறைப்பாடும் பொலிஸில் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் காணொளியில் முகக்கவசம் அணிந்தபடி அடித்து துன்புறத்தும் நபரே யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார், இந்த துன்புறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01