(என்.வீ.ஏ.)
2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரராக தென் ஆபிரிக்காவின் மார்க்கோ ஜென்சனும் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ரேனுகா சிங்கும் தெரிவாகியுள்ளனர்.
தென் ஆபிரிக்காவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு அறிமுகமான மார்க்கொ ஜென்சன் (22 வயது) கடந்த வருடம் 8 டெஸ்ட் போட்டிகளில் 19.02 என்ற சராசரியுடன் 36 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அனுபவம் பெற்ற பந்துவீச்சாளர்களான தென் ஆபிரிக்காவின் கெகிசோ ரபாடா (47 விக்கெட்கள்), அவுஸ்திரேலியாவின் நெதன் லயன் (47 விக்கெட்கள்), இங்கிலாந்தின் ஜெக் லீச் (46 விக்கெட்கள்), ஸ்டுவர்ட் ப்றோட் (40 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 2022இல் ஜென்சன் 5ஆம் இடத்தைப் பெறறார்.
அனுபவம் குறைந்தவர்களில் அவர் முதலிடம் வகிப்பதுடன் இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய (3 போட்டிகளில் 29 விக்கெட்கள்) 2ஆம் இடத்தில் உள்ளார். ஜயசூரிய ஒட்டுமொத்த நிலையில் 10ஆம் இடத்தை வகிக்கிறார்.
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ள ஜென்சன், துடுப்பாட்டத்திலும் சளைத்தவர் அல்லர். பின்வரிசை துடுப்பாட்ட வீரரான அவர், 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச் சதத்துடன் 277 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
ரேணுகா சிங்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு அறிமுகமான ரேணுகா சிங், கடந்த வருடம் பந்துவீச்சில் அற்புதமாக செயற்பட்டார்.
இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் பல வெற்றிகளுக்கு ரேணுகா அடிகோலியதுடன் மொத்தமாக 40 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாகவே ஐசிசி வளர்ந்துவரும் வருடத்தின் அதிசிறந்த வீராங்கனையாக ரேணுகா தெரிவானார்.
கடந்த வருடம் 7 மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14.88 என்ற சராசரியுடன் 18 விக்கெட்களையும் 22 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 23.95 என்ற சராசரியுடன் 22 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இது இவ்வாறிருக்க இணை உறுப்பு நாடுகளுக்கான ஐசிசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை நமீபியா அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸும் ஐசிசி வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஈஷா ஓஸாவும் வென்றெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM