(எம்.எம்.சில்வெஸ்டர்)
படகொன்றின் மூலமாக 49 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்கள் முவரும் கடந்த 25 ஆம் திகதி அதிகாலைவேளையில் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றின் மூலமாக பயணித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையிட்டுள்ளனர்.
இந்த சோதனையையடுத்து, அவர்கள் 49 கிலோ கிராமும் 906 கிராமும் நிறையுடைய கஞ்சாவை கடத்த முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேனி மற்றும் மண்டைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 25, 32, 42 ஆகிய வயதுகளையுடைவர்களாவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று (26) கைட்ஸ் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தற்கான நடவடிக்கைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்ருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM