கனவுகளோடு கூடிய தூக்கம் எல்லோருக்கும் அவசியம். தூங்க ஆரம்பித்ததில் இருந்து 90வது நிமிடத்தில் வரும் Rapid eye movement (REM) sleep அவசியம்.
அப்படித்தான் நம் மூளையின் அமைப்பு இருக்கிறது. இந்தத் தூக்கத்தில் ஓடுவது மாதிரி, துரத்துவது மாதிரி, பாலியல் இச்சைகள், ஸ்ட்ரெஸ் என எல்லாம் கலந்த கனவுகள் வரும்.
கண்கள் சுழன்றாலும், நாம் அசைவற்ற நிலையிலேயே இருப்போம் என்கின்றன ஆய்வுகள். அதாவது கனவுகளை உண்மையென நினைத்து அந்த நேரத்தில் நாம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே நம் தசைகள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும்.
பொதுவாகவே நெகட்டிவ் கனவுகள் நினைவில் இருக்கும். பாம்பு துரத்துவது போல, தண்ணீரில் மூழ்குவது போல, சோகத்தில் துடிக்கிற மாதிரியெல்லாம் கனவுகள் வரும்.
கனவுகள் என்பவை சிறு குழந்தைக்குக்கூட வரும். குழந்தை தூங்கும்போது சிரிப்பதைப் பார்ப்போம். அதே போல அது பயந்து அழுவதையும், விம்முவதையும்கூட பார்க்கலாம்.
வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயத்தையும் ரொம்பவும் யோசித்து, அது குறித்த நெகட்டிவ் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தாலோ, எதிர்காலத்தை நினைத்து அதீதமாகக் கவலைப்பட்டாலோ, நடந்து முடிந்த விஷயங்கள் குறித்து 'இப்படிச் செய்திருக்கலாமோ, அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ' என்று வருத்தப்பட்டாலோ இப்படிப்பட்ட கனவுகள் வரலாம். இறந்த காலத்தை மீண்டும் மீண்டும் யோசித்து, மன அழுத்தம் கொள்வது இத்தகைய நெகட்டிவ் கனவுகளுக்கு முக்கிய காரணமாகலாம். மற்றபடி கனவுகள் பலித்துவிடுமோ, நடக்கப்போகிற செயல்களை உணர்த்துகின்றனவோ என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம்.
நெகட்டிவ் கனவுகள் வேண்டாமென நினைத்தால் நீங்கள் விழித்திருக்கும் வேளைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது அந்த நேரத்தில் பொசிட்டிவ் சிந்தனையுடன், ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழப் பழகுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு அணுகுங்கள். நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது எல்லாமே நன்மைக்கே என்ற பொசிட்டிவ் மனநிலைக்குத் தயாராகுங்கள். உங்கள் சிந்தனை மாறினால், அது உங்கள் தூக்கத்திலும் பிரதிபலிக்கும். ஆழ்ந்த, நிம்மதியான உறக்கத்துக்கு யோகா, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவையும் உதவும். உங்களால் முடிகிற விஷயத்தைப் பின்பற்றிப் பாருங்கள்.
தூங்கச் செல்வதற்கு முன் மனதை லேசாக்கும் விஷயங்களை மட்டும் யோசியுங்கள். நல்ல புத்தகங்கள் வாசிப்பது, நல்ல இசையைக் கேட்பது, நகைச்சுவையான விஷயங்களை அசைபோடுவது என அது எதுவாகவும் இருக்கலாம்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM