தேர்தலுக்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - அநுர குமார

Published By: Vishnu

26 Jan, 2023 | 11:37 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியை திரைமறைவில் இருந்து முன்னெடுப்பதை விடுத்து ஜனாதிபதி தான் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாவல பகுதியில் வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்களாதரவு அத்தியாவசியமாகும்.மக்களின் ஆதரவு இல்லாமல் அரசாங்கத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, ஆகவே அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.

தேர்தல் ஊடாகவே மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தின் ஊடாக தமது எதிர்பபை வெளிப்படுத்தினார்கள்.

பொது தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கெர்ணடு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடுத்தர மக்களை வரி விதிப்பால் நெருக்கடிக்குள்ளாக்கி ராஜபக்ஷர்களை அருமையாக பாதுகாத்துள்ளார். இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த இடமளிக்க வேண்டும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதி செய்யாத சூழ்ச்சி ஏதும் கிடையாது, அனைத்து தடைகளையும் மீறி தேர்தலுக்கு தற்போது திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆணைக்குழு உறுப்பினர் விவகாரத்தில் புது பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது,தேர்தலை நடத்த தோற்றம் பெறும் அனைத்து நெருக்கடிகளுக்கு பின்னணியில் ஜனாதிபதியே உள்ளார்.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளை திரைமறையில் இருந்து முன்னெடுப்பதை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29