வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

Published By: Raam

29 Dec, 2015 | 04:11 PM
image

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 

சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றியவர் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலே மரணமானார்.

இவ் சம்பவம் நேற்று பிற்பகல் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் வங்காலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த மன்னார் வங்காலையைச் சேர்ந்த சுமன் என அழைக்கப்படும் என்.ஸ்ரான்லி போல் லெம்பேட் (வயது 33) என்பவர் நேற்று நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து விட்டு பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நானாட்டான் வங்காலை வீதியில் இவர் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபொழுது அதே வீதியில் இவருக்கு எதிரே வந்த வாகனம் மோதியதில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலியானார்.

இறந்தவர் இரு குழந்தைகளுக்கு தந்தை. இறந்தவரின் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்டதுடன் இவ் மரணம் தொடர்பாக முருங்கன் பொலிசார் வாகன சாரதியை கைது செய்து விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - அமெரிக்க உறவை பதிவு...

2026-07-16 07:22:12
news-image

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு...

2026-07-16 07:11:42
news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40