இந்திய அரசாங்கத்தின் அதியுயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்ற எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனை பாராட்டி கெளரவிக்கும் விழா தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினருமான பா. அனந்தபால கிட்ணர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் வரவேற்புரையினை சுயாதீன ஊடகவியலாளர் ஏ.ஆர்.வி. லோஷன் ஆற்றவுள்ளார்.
அதனை தொடர்ந்து ஆசியுரையினை நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனும் தலைமையுரையினை அனந்தபால கிட்ணரும், வாழ்த்துரைகளை பேராசிரியர் மா.செ. மூக்கையா (முன்னாள் உபவேந்தர் - கிழக்கு பல்கலைக்கழகம்), ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமார் (பீடாதிபதி - மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்), பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ், கலாநிதி எஸ். சேந்தன் (பணிப்பாளர் ஊடகம், மனித உரிமைகள் மற்றும் சமாதானத்துக்கான நிலையம், இங்கிலாந்து), பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் (சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்), திருமதி அருந்ததி இராஜவிஜயன் (அதிபர், கொழும்பு சைவ மங்கையர் கழகம்) ஆகியோர் வழங்கவுள்ளனர்.
பாராட்டுரைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், தே.செந்தில்வேலவர் (பிரதம ஆசிரியர், தினகரன்) ஆர். சிவராஜா (பிரதம ஆசிரியர், தமிழன்), சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.பாரதி, சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்ஸன், சி.கேசவன் (விரிவுரையாளர், சியன தேசிய கல்விக் கல்லூரி) ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
ஏற்புரையினை குமார் நடேசனும், நன்றியுரையினை பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் (பிரதி செய்திப் பணிப்பாளர், சூரியன் எப்.எம்) ஆகியோர் வழங்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM