(எம்.மனோசித்ரா)
உரிய வெப்ப நிலையில் நீண்ட காலத்துக்கு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 13 தடுப்பூசி களஞ்சிய அறைகள் ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பான் அரசாங்கத்தின் அவசர உதவியின் கீழ் நாட்டில் உள்ள குழந்தைகளின் நீண்ட கால மற்றும் குறுகிய கால சுகாதார தேவைகளை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி, இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில், தொற்றுநோய் பிரிவில் நிறுவப்பட்டுள்ள 3 தடுப்பூசி களஞ்சிய அறைகள் நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகுஷி ஹிடேகி ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டன.
இந்த நன்கொடையை யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் அரசாங்கம் வழங்கியது. 3 இலட்சம் டொலருக்கும் அதிக பெறுமதியுடைய இந்த 13 தடுப்பூசி களஞ்சிய அறைகளில் மூன்று தொற்றுநோய் பிரிவுக்கும், ஏனையவை மாவட்ட சுகாதார மருத்துவ பிரிவுகளுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM