இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகி, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு..' என தொடங்கும் பாடல் ஒஸ்கர் விருதினை பெறுவதற்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், இந்த பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் கதையின் நாயகர்களாக நடித்து வெளியாகி வெற்றி பெற்ற 'ஆர்.ஆர்.ஆர்' எனும் திரைப்படத்தில் 'நாட்டு நாட்டு...' எனும் நாட்டுக்குத்து பாடல் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் பாடல் வெளியான தருணத்திலிருந்து இதுவரை கோடிக்கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்துவருகிறது.
அண்மையில் கோல்டன் க்ளோப் விருதினை வென்று புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில் திரையுலகின் உச்சபட்ச கௌரவமாக கருதப்படும் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பாடல், இந்த விருதுக்காக தெரிவாகும் இறுதிப் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது.
இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த ஆறு பாடல்களில் ஒரு பாடலாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' பாடலுக்கு அசல் பாடல் எனும் பிரிவில் ஒஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM