(எம்.வை.எம்.சியாம்)
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொனஹென பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சபுகஸ்கந்த, மாகொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.இதன்போது சந்தேக நபரிடமிருந்து 501 கிராம் ஐஸ் போதைப்பொருள், 56 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 2 கையடயக்கத்தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 95,000 ரூபா பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM