மலையாள மொழியில் தயாராகி வெற்றிபெற்ற 'மாளிகப்புரம்' எனும் சமூக பக்தி திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஐயப்பனை தரிசிக்க சென்ற அனைத்து பக்தர்களும் அந்த ஆலய வளாகத்தில் உள்ள 'மாளிகப்புரம்' எனும் சந்நிதிக்கும் சென்று தரிசித்திருப்பர்.
படத்தினது கதையின்படி,
இந்த ஆலயத்தில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்ற கட்டுப்பாடு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பக்தர் ஒருவர் தன்னுடைய எட்டு வயது நிரம்பிய பெண் பிள்ளையின் விருப்பத்துக்காக அவரை ஸ்ரீ ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கிறார்.
ஆனால், எதிர்பாராத காரணத்தினால் அந்த எட்டு வயதுப் பெண்பிள்ளை, தன் வகுப்புத் தோழனுடன் தனியாகவே ஸ்ரீ சபரி ஐயப்பனை தரிசிக்க பயணிக்கிறாள்.
அவளால் தடங்கலின்றி ஐயப்பனை காண முடிந்ததா? அவள் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன? இவற்றை உணர்வுபூர்வமாகவும் சமூக பக்தி படைப்பாகவும் வெளிக்காட்டும் வகையில் தயாராகியிருக்கிறது 'மாளிகப்புரம்'.
இந்த திரைப்படத்தில் நடிகர்கள் உன்னி முகுந்தன், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ரெஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுத, அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியிருக்கிறார்.
'மூக்குத்தி அம்மன்' போன்ற தமிழில் வெளியான சமூக பக்தி திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, ஐயப்பனை பற்றிய 'மாளிகப்புரம்' படத்துக்கும் கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM