ஏ.ஆர். மன்சூர் பவுண்டேஷனின் அனுசரணையில் அறம் வலையமைப்பு நடத்திய 'அறிவுச்சுடர்' போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியும் கடந்த சனிக்கிழமை (21) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது அந்நிறுவனத்தினதும் அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலினதும் தலைவியான சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுடீனின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின்போது கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட எட்டு தேசிய பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 'அறிவுச்சுடர்' போட்டித் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்த முதல் மூன்று பாடசாலைகளின் மாணவக்குழுக்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசில்கள், சான்றிதழ்களும், சுற்றுத்தொடரில் பங்குகொண்ட பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதன்படி, இப்போட்டியில் முதல் இடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியும் (தேசிய பாடசாலை), இரண்டாம் இடத்தை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியும் (தேசிய பாடசாலை), மூன்றாம் இடத்தை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையும் (தேசிய பாடசாலை) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்துக்கு ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனினால் நகல் எடுக்கும் இயந்திரமொன்றும் வழங்கப்பட்டது.
இந்த போட்டி நிகழ்ச்சிக்கு அறம் வலையமைப்பின் ஸ்தாபகர் டொக்டர் சிஹாபுடீன் நளிமுடீன், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை கல்வி வலய பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுல்லா, பிரதிக் கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் சபீனா இம்தியாஸ், கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு, அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யு.எல்.நசார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM