அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கலிபோர்னிய நகரமான மொனெட்டரி பார்க்கில் நடன நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துபேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லூனார் புதுவருட கொண்டாட்டங்களிற்காக இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் தப்பியோடிய நபரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரசேவை பிரிவினர் அந்த பகுதிக்கு சென்றவேளை உள்ளேயிருந்து மக்கள் அலறியவண்ணம் வெளியில் ஓடி வந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோக்திற்கான காரணம் தெரியவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு ஆசிய பிரஜைகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
நகரில் பெருமளவு பொலிஸ் பிரசன்னம் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் காணப்படுகின்றார் கதவுகளை மூடுங்கள் என மூவர் தெரிவித்தனர் என நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நடனநிகழ்வுஇடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்குள் துப்பாக்கிதாரி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM