பலவீனமான அரச தலைவருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான மக்கள் போராட்டம் - மக்கள் விடுதலை முன்னணி சூளுரை 

Published By: Nanthini

22 Jan, 2023 | 04:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பலவீனமான அரச தலைவருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான மக்கள் போராட்டம் கடந்த 2022.04.09 அன்று ஆரம்பமானது. 

மக்கள் போராட்டம் நிறைவடையவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள் போராட்டம் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பேருவளை தொகுதி அமைப்பாளர் தொகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

நாட்டில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் 9ஆம் திகதியில் இடம்பெற்றன. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் வரலாற்று சம்பவங்களை மீட்டிப் பார்த்து தேர்தல் திகதியை நிர்ணயித்துள்ளார்கள்.

ஊழல் மற்றும் பலவீனமான அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் 2022.04.09ஆம் திகதி ஆரம்பமானது. மக்களின் அபிலாசைகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிர்ணயித்துள்ளது.

ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தன்னிச்சையான போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சிறந்த அரச தலைவர்களையும் அரசாங்கத்தையும் தெரிவுசெய்ய வேண்டுமாயின், முதலில் நாட்டு மக்கள் பாரம்பரிய சிந்தனைகளில் இருந்து மாற்றமடைய வேண்டும் என்பதை மக்கள் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தினார்கள்.

மக்கள் மாற்றத்தை இன்றும் அரச தலைவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.

போராட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தாம் வெற்றி பெற்றதாக அரச தலைவர்கள் எண்ணுகிறார்கள். அரச தலைவர்கள் தோல்வி என்பது இந்த ஆண்டு ஜனநாயக ரீதியில் உறுதிப்படுத்தப்படும்.

பலவீனமான அரச தலைவரை 2022ஆம் ஆண்டு வெளியேற்ற முடியுமாயின், 2023ஆம் ஆண்டு சிறந்த தலைவரை தெரிவுசெய்ய முடியும்.

பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தவர்களினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. 

பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாத்து, பொருளாதார மீட்சிக்காக நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறார். இந்நிலை முதலில் மாற்றமடைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16