பெரு நாட்டின் ஜனாதிபதி டினா போலுவார்டேவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லிமாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் ஒன்று வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். மேலும் பிளாசா சான் மார்டினில் உள்ள கட்டிடம் தீயின் போது எரிந்து நாசமாகியதாக கருதப்படுகிறது.
பெருவின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ ஜனாதிபதி பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யுமாறும் டினா பொலுவார்டே பதவி விலகுமாறும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் பெரு நாட்டில் பல இடங்கள் போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தலைநகர் லிமாவில், போராட்டக்காரர்கள் இணைந்து மாபெரும் பேரணியை நடத்தினர்.
அப்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைத்தனர்.
நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால் பெரு நாட்டில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM