தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கான கொலை அச்சுறுத்தல் : சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு விசாரணை

Published By: Digital Desk 5

21 Jan, 2023 | 10:38 AM
image

 ( எம்.எப்.எம்.பஸீர்)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேரில் இருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில்  சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான சிரப்புக் குழுவொன்று இது குறித்து விசாரணைகலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு  வேட்புமனு கோரப்பட்டுள்ள நிலையில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதிப்  பொலிஸ்மா அதிபர் கே.பி.பத்திரண மற்றும் முன்னாள் அரச அதிகாரி  எஸ்.பி. திவாரத்ன ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு மற்றும் கடவத்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில்  முறைப்பாடு செய்யப்ப்ட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து  விலகுமாறும் இல்லையேல் குடும்பத்தாருடன் கொலை செய்யப்படுவீர்கள் என  மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தனக்கு நேற்று  முன் தினம் (19)மாலை 3.00 மணியளவில்  வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அநாமதேய தொலைபேசி அழைப்பு  கிடைக்கப் பெற்றதாகவும் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  கே.பிபத்திரண  அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தன்னை போராட்டக் குழுவின் அங்கத்தவர் என அடையாளபப்டுத்திக்கொண்டதாகவும் பத்திரண  தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்திரணவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில்,   வட்ஸ் அப் மூலம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ்.பி. திவாரத்னவுக்கும் அழைப்பெடுக்கப்ப்ட்டு அச்சுறுத்தல் விடுக்கப்ப்ட்டுள்ளது. அதே பானியில் அவரும் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்யப்ப்ட்டுள்ள முறைப்பாடு ஊடாக தெரியவந்துள்ளது.

அச்சுறுத்தல் விடுக்கப்ப்ட்டதன்  பின்னர் அச்சுறுத்தியதாக நம்பப்படும் நபர் தனது வீட்டினை வீடியோ பதிவு செய்து, அதனை  வட்ஸ் அப் செய்ததாகவும்  திவாரத்ன முறைப்பாட்டில்  கூறியுள்ளார்.

இந் நிலையிலேயே இவ்விரு முறைப்படௌகள் குறித்தும் உடனடியாக குற்றப் புலனயவுத் திணைக்களம் அரிவியல் தடயங்களை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,  அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உறுப்பினர்களுக்கு ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பும் வழ்னக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பிரகாரம், குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49