(எம்.மனோசித்ரா)
நம்பகமான ஓர் அயல்நாடாகவும் பங்காளியாகவும் உள்ள இந்தியா, தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்காக எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவுகள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இன்று (20) வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ,
'ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமையையிட்டு மகிழ்வடைகின்றேன். அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான எனது விஜயம் அமைந்துள்ளதாக அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
நம்பகமான ஓர் அயல்நாடாகவும் பங்காளியாகவும் உள்ள இந்தியா, தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்காக எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது. தேவையான இந்நேரத்தில் நாம் இலங்கையுடன் துணைநிற்பதன் மூலம், இலங்கை எதிர்கொள்ளும் சகல சவால்களையும் வெற்றிகொள்ளமுடியுமென நம்புகின்றோம்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM