அவுஸ்திரேலிய ஓட்ட வீரர் பீட்டர் போல், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதையடுத்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய மெய்வல்லுநர் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
சூடானில் பிறந்த பீட்டர் போல், 800 மீற்றர் ஓட்ட வீரர். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் அவர் தவறவிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம், பீட்டர் போலிடம் ஊக்கமருந்து மாதிரி பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அச்சோதனையில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் ஒரு அப்பாவி எனத் தெரிவித்துள்ள பீட்டர் போல், ஊக்கமருந்து சோதனை பெறுபேறு குறித்து தான் அதிர்ச்சிடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட எந்தப் பொருளையும் தான் வாங்கவோ, பயன்படுத்தவோ இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேற்படி சோதனைப் பெறுபேற்றை உறுதிப்படுத்துவற்காக, பீட்டர் போலிடமிருந்து பெறப்பட்ட மாதிரியில் இரண்டாவது சோதனை நடத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM