(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் எவ்வாறு வெளியாகிறது?
நீதிமன்ற நடவடிக்கை உட்படுத்தப்பட்டுள்ள இந்த விடயத்தின் இரகசியத்தன்மையை பாதுகாக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
சபாநாயகர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானபோது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு குதிரை பந்தயத்திடல் மைதானத்தில் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து வெளியாகியுள்ளன.
குறித்த சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலம் எவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது?
மாணவி கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
விசாரணை அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னர் எவ்வாறு சந்தேக நபர் வழங்கும் வாக்குமூலத்தை பகிரங்கப்படுத்த முடியும்?
ஆகவே, இந்த கொலை தொடர்பான விசாரணையின் இரகசிய தன்மையை பாதுகாக்குமாறு பொலிஸ் தரப்புக்கு பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.
இவ்விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM