இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கும் கடிதத்தை இந்தியா திங்கட்கிழமை சர்வதேச நாணயநிதியத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இந்து நாளிதழ் இதன் மூலம் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆதரித்த முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு 19 மற்றும் 20 திகதிகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விஜயம் மேற்கொள்வதற்கு முன்னதாகவும் இலங்கை தலைவர்கள் சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்த பின்னரும் இது இடம்பெற்றுள்ளதாக இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து மூல உத்தரவாதம் திங்கட்கிழமை சர்வதேசநாணயநிதியத்திற்கு அனுப்பப்பட்டது என கொழும்பில் உள்ள உயர்மட்ட வட்டாரமொன்று தெரிவித்தது என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது சர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவியை பெறுவதை நோக்கி இலங்கையை மேலும் ஒரு படி நகர்த்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்து நாளிதழ் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைப்பதற்கு இலங்கைக்கு அதன் கடன் வழங்குநர்களின் உத்தரவாதமும் தனியார் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முயற்சிகளும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM