(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை 394 புகையிரத திணைக்கள சேவையாளர்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளார்கள்.
அனுமதியின்றி சுவிகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் முன்வைத்த வாய்மூல விடைக்கான வினாக்களின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
புகையிரத திணைக்கள சேவையாளர்களில் 394 பேர் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் தற்போது சேவையில் இல்லை, ஒருசிலர் மரணமடைந்துள்ளார்கள், ஏனையோர் சேவையில் உள்ளார்கள்.
சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசுடமையாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமாதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் தற்காலிகமாக வாழ்பவர்கள் புகையிரத திணைக்களத்திற்கு வரி செலுத்துகிறார்கள்.
ஒருசிலர் வரி செலுத்துவதில்லை,ஒருசில பகுதிகளில் வாழ்பவர்கள் பலவந்தமான முறையில் புகையிரத திணைக்கத்துக்கு சொந்தமான காணிகள் இதர நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்.
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியை நீண்டகால குத்தகைக்கு வழங்கு முடியாது. ஐந்து வருட காலத்திற்கு மாத்திரம் காணியை குத்தகைக்கு வழங்கும் நிபந்தனை அடிப்படையில் வழங்கும் அதிகாரம் புகையிரம திணைக்கள பொது முகாமையாளருக்கு உண்டு.
பிரித்தானியர் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் புகையிரத சேவையில் இன்றும் வழக்கில் உள்ளது.புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிக்குள் அனுமதி இன்றி உட்பிரவேசிப்பது. புகையிரத தண்டவாளங்களில் அனுமதியின்றி நடப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்ற கடுமையான சட்டங்கள் காணப்படுகிறது.
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான வளங்களை பாதுகாக்க 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தரப்பினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM