எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் இன்று (ஜன. 18) மதியம் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக கிளிநொச்சி - கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தது.
அதனையடுத்து இன்றைய தினம் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM