தோள்பட்டையின் பின்பகுதியில் அமைந்துள்ள ட்ரேபீஸியஸ் எனும் தசைகளில் ஏற்படும் பிடிப்பு, வலி, விறைப்பு, அழுத்தம் ஆகியவற்றால் கடுமையான வலி உண்டாகும். இதுவும் தோள்பட்டை வலிகளில் ஒரு வகையாகும்.
ஒரே பணியை திரும்பத் திரும்ப தொடர்ச்சியாக செய்வதாலும், முறையான ஓய்வின்றி கடுமையாக உழைப்பதாலும் இவை உண்டாகிறது.
மேலும், சிலருக்கு ஒரே மாதிரியான பணிகளில் ஈடுபட்டு மனதளவில் சலிப்பு ஏற்படுவதாலும் இத்தகைய தோள்பட்டை வலி உண்டாகலாம். குறிப்பாக, கணினி பணிகளில் ஈடுபட்டிருக்கும் பலருக்கு இத்தகைய வலியுடன் தசை கூட்டு வலியும் உண்டாகும்.
திடீரென கழுத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள தோள்பட்டையில் வலி ஏற்படுதல், அங்கு தசைப்பிடிப்பு மற்றும் ஸ்டிப்னஸ் எனப்படும் விறைப்புத்தன்மை ஏற்படுதல், கழுத்து மற்றும் தோள்பட்டையில் இறுக்கமான உணர்வு ஏற்பட்டு, வலி உண்டாகுதல், ஒக்ஸிபிடல் தலைவலி எனப்படும் பிரத்தியேக தலைவலி உண்டாகுதல், கவலை, மனநிலையில் தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால், இத்தகைய வலி ஏற்படக்கூடும்.
இதனை மருத்துவரிடம் காண்பித்து உரிய பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, சிகிச்சை பெற வேண்டும்.
பிஸிக்கல் தெரபி, எக்ஸசைஸ் தெரபி, மெனுவல் தெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் நிவாரணத்தை வழங்க இயலும்.
மேலும், சிலருக்கு வலி தொடர்ந்தால், அவர்களுக்கு மேலதிக பரிசோதனைகளை செய்து, அவர்களுக்கு பி.ஆர்.பி சிகிச்சை எனப்படும் பிளெட்லெட் ரிச் பிளாஸ்மா எனும் நவீன சிகிச்சையை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
- டொக்டர் பாலசுப்ரமணியன்
(தொகுப்பு: அனுஷா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM