இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பான கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலொன்று நேற்று (ஜன. 17) மாலை யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவுசெய்வது என்பதில் கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் நிலவியதால் முதல்வர் வேட்பாளர் தெரிவு குறித்து தீர்மானிப்பதற்கான கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது.
இதனால் வேட்பாளர் தெரிவு குறித்து முடிவெடுப்பதற்கு மீண்டும் இன்றைய தினம் (18) காலை 9 மணிக்கு கட்சிக் கூட்டம் தொடர்கிறது.
இதில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியினர் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது முன்னாள் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் சொலமன் சிறில் ஆகியோரின் பெயர்கள் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் தெரிவுக்கு முன்மொழியப்பட்டன.
அதன் பின்னர், இவர்கள் இருவரிலும் ஒருவரை முன்மொழிவது தொடர்பில் முடிவேதும் எட்டப்படாத காரணத்தினால் கூட்டம் இணக்கமின்றி நிறைவுற்ற நிலையிலேயே, அதன் தொடர்ச்சியாக இன்று காலை மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் யாழ். மாநகர முதல்வர் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM