(என்.வீ.ஏ.)
தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ருவண்டா வீராங்கனை ஹென்றியெட் இஷிம்வே 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.
அவரது பந்துவீச்சின் உதவியுடன் ஸிம்பாப்வேயை 39 ஓட்டங்களால் ரூவண்டா வெற்றிகொண்டது.
இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் ருவாண்டா முதலாவது வெற்றியை ஈட்டி வரலாறு படைத்துள்ளது.
யோர்க்கர் பந்துகளின் மூலமே அடுத்தடுத்த 4 விக்கெட்களை வீழ்த்தியதாகவும் யோர்க்கர் பந்துகளை வீசுவதற்கென விசேட பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் போட்டியின் பின்னர் ஹென்றியெட் இஷிம்வே தெரிவித்தார்.
120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடர்ந்து 19ஆவது ஓவரை வீசிய ஹென்றியெட் முதல் 4 பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்களை வீழ்த்தி ருவண்டாவின் வெற்றியை உறுதி செய்தார்.
முதல் பந்தில் குட்ஸாய் சிகோராவை போல்ட் ஆக்கிய ஹென்றியெட் இஷிம்வே, அடுத்த பந்தில் ஒலிண்டர் சாரேயை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்து 2 பந்துகளில் சிப்போ மோயோ, ஃபெய்த் நிடிலாலம்பி ஆகிய இருவரினதும் விக்கெட்களை நேரடியாக பதம் பார்த்தார்.
மேலும், தொடர்ச்சியான 2 ஓவர்களில் 6 பந்துகளில் ஸிம்பாப்வேயின் 5 விக்கெட்கள் கைப்பற்றப்பட்டமை மற்றொரு விசேட அம்சமாகும்.
18ஆவது ஓவரின் 5ஆவது பந்திலும் 19ஆவது ஓவரின் முதல் 4 பந்துகளிலுமே 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.
அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ருவண்டா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 119 ஓட்டங்களை பெற்றது.
முதல் 3 துடுப்பாட்ட வீராங்கனைகளான மெர்வில் உவாஸ் (18), சின்தியா டுயிஸியர் (30), அணித் தலைவி ஜிசெல் இஷிம்வே (34) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்றனர்.
ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிப்போ மோயோ 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், குட்ஸாய் சிகோரா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் நட்டாஷா மிட்டொம்பே, கெலி நிடிராயா ஆகிய இருவரும் தலா 20 ஓட்டங்களை பெற்றனர்.
ருவண்டா பந்துவீச்சில் ஹென்றியெட் இஷிம்வே 3.4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM