வடக்கு, கிழக்கை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணியாகவே போட்டியிடுவோம் : எமக்குள் எவ்வித பிளவும் இல்லை - விமல், தயாசிறி கூட்டாக அறிவிப்பு

Published By: Vishnu

17 Jan, 2023 | 08:46 PM
image

(எம்.மனோசித்ரா)

வடக்கு மற்றும் கிழக்கில் சில பிரதேசங்களை தவிர்த்து ஏனைய அனைத்து தொகுதிகளிலும் சுதந்திர மக்கள் கூட்டணியாகவே தேர்தலில் போட்டியிடுவோம். யானை - மொட்டு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்களே எமக்குள் பிளவு என்ற செய்தியைப் பரப்பியுள்ளனர் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

விமல், மைத்திரி, டலஸ் கூட்டணிக்குள் வேட்புமனு தாக்கல் விடயத்தில் முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதாகவும் , எனவே சு.க. தனித்து போட்டியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சு.க. பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்கவும் இதனையே தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தனித்து போட்டியிட ஆரம்பத்தில் தீர்மானித்தாலும் , பின்னர் கூட்டணியிலுள்ள ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி அந்த தீர்மானத்தில் சில மாற்றங்களை செய்துள்ளோம்.

யானை - மொட்டு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர்களே எமது கூட்டணிக்குள் பிளவு என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் எமது கூட்டணியில் எவ்வித பிளவுகளும் இல்லை. பல மாவட்டங்களில் நாம் ஒன்றாகவே போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

சில மாவட்டங்களில் மாத்திரம் கை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். கூட்டணியில் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் எமக்குள் கலந்துரையாடி அவற்றுக்கு தீர்வு காண்போம் என்றார்.

இது குறித்து விமல் வீரவன்ச தெரிவிக்கையில் ,

வடக்கு மற்றும் கிழக்கில் சில பிரதேசங்களை தவிர்த்து ஏனைய அனைத்து தொகுதிகளிலும் சுதந்திர மக்கள் கூட்டணி போட்டியிடும்.

எந்தெந்த தொகுதிகளில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுடன் தீர்மானித்துள்ளோம். எமக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சிலரது நிலைப்பாடாகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07