(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பொருளாதார மீட்சிக்காக கடுமையான திட்டங்களை அமுல்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் சில தரப்பினர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்று ஆய்வுகளை மேற்கொண்டால் பயணம் நீண்டு செல்லுமே தவிர தீர்வு காண முடியாது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது
சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.சமுர்த்தி பயனார்களின் உண்மை தகவல்களை பிரதேச செயலக அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்.
அடுத்த மாதமளவில் குறித்த தகவல்களை வழங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள். சமுர்த்தி திட்ட கொள்கையை மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் வரி கொள்கையை அமுல்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் தற்போதைய நெருக்கடியை விட பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் கடந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் இருந்த நிலைமையை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள். கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தாமல் இருந்திருந்தால் இந்நிலைமை பன்மடங்கு தீவிரமடைந்திருக்கும்.
அரசாங்கம் எடுத்த ஒருசில கடுமையான தீர்மானங்களினால் பொருளாதாரம் தற்போது ஸ்தீரமடைந்துள்ளது.அரசியல் தரப்பினர் தமது அரசியல் இருப்பிற்காக நாட்டின் சட்ட ஒழுங்கை பலவீனப்படுத்தி பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். அரசியல் தரப்பினரது செயற்பாடு வெறுக்கத்தக்கது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM