தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது ; பந்துல

Published By: Digital Desk 3

17 Jan, 2023 | 03:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள நிதி நிலைமையின் அடிப்படையில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு 16 பில்லியன் செலவாகக் கூடும்.

எனினும் தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது. கட்டம் கட்டமாக திறைசேரியினால் இதற்கான நிதி வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர்,  இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலுக்காக பணத்தை அச்சிட முடியாது. கடன் மறுசீரமைப்பு மற்றும் அத்தியாவசிய கடன்களை மீள செலுத்தல் தவிர்ந்த வேறு எந்தவொரு காரணிக்காகவும் பணத்தை அச்சிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இதுவே அராசங்கத்தின் கொள்கையாகும். அரசாங்கத்தின் கொள்கை மீறப்பட்டால் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு 8 பில்லியன் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்  இம்முறை நாட்டு நிலைமைகளுக்கமைய இந்த செலவுகள் இரு மடங்காக அதிகரிக்கக் கூடும்.

எனவே இம்முறை 16 பில்லியன் செலவாகக் கூடும். எவ்வாறிருப்பினும் தேர்தல் செலவுகளுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்குவதாக திறைசேறி செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் மின்சாரம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37