மியன்மார் இராணுவம் தனது சொந்த மக்களிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக பெருமளவில் ஆயுதங்களை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ள ஐநாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் 13 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் விநியோகங்களை பயன்படுத்தியே மியன்மார் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மியன்மார் தொடர்பான விசேட ஆலோசனை குழுவே தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மியன்மாரை தனிமைப்படுத்துவதற்காக மேற்குலகம் தடைகளை விதித்துள்ள போதிலும் இந்தியா அமெரிக்கா பிரான்ஸ் உட்பட பலநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வழங்கும் விநியோகங்களை பயன்படுத்தி மியன்மார் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என ஐநா தொடர்பான விசேட ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை இராணுவத்தினை எதிர்ப்பவர்களிற்கு எதிரான அநீதிகளிற்கு மியன்மார் பயன்படுத்துகின்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் உறுப்புநாடுகள் பல தொடர்ந்தும் மியன்மாருக்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றன ஐநாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நிறுவனங்கள் மியன்மாரிற்கு மூலப்பொருட்களை பயிற்சிகளை இயந்திரங்களை வழங்குகின்றன இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களை மியன்மார் தனது எல்லையை காப்பதற்கு பயன்படுத்துவதில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM