கல்முனை மாநகரில் தைப்பொங்கல் விழா

Published By: Nanthini

16 Jan, 2023 | 05:21 PM
image

ம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் திருவிழா - 2023 கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்தில் இளைஞர் சேனை அமைப்பின் தலைவர் எம்.சங்கீத் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணுசரனையுடன் இன்று (16) கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய கொடி,  தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் கொடி,  நந்திக்கொடி என்பன அதிதிகளால் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு, பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார். 

மேலும், கௌரவ அதிதியாக அம்பாறை  மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்  வே. ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக்க, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், வைத்தியர் புஷ்பலதா லோகநாதன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், கல்முனை வடக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.வசந்தி,   உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல், சேனையின் கீதம் இசைத்தல், கலை நிகழ்ச்சிகள், விசேட உரைகள் முதலியன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன், கல்முனை உவெஸ்லி உயர்தர மாணவர்களின் நடனமும் விழாவுக்கு அழகு சேர்த்திருந்தன.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் உரையாற்றும்போது, 

இந்து மக்கள் மாத்திரமல்லாது, மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகிறது. மதங்கள், இனங்கள் வேறாக இருந்தாலும், நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும். 

அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த  என்னை பிரதம அதிதியாக அழைத்து இப்படியான ஒரு கௌரவத்தை வழங்கிய இந்நாளை என்னால் மறக்க முடியாது. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.

வருடா வருடம் கல்முனை பிரதான நகரம் தைப்பொங்கல் தினத்தன்று அலங்கரிக்கப்பட்டு, தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. 

ஆண்டுதோறும் மாட்டு வண்டிகள் ஊர்வலமாக சென்று, தைப்பொங்கல் திருவிழா இளைஞர்களால் கொண்டாடப்படுவது போல் இந்த ஆண்டும் இளைஞர் சேனை அமைப்பினரால் பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08