அம்பாறை மாவட்டத்தின் பிரதான தைப்பொங்கல் திருவிழா - 2023 கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பழைய பஸ் நிலையத்தில் இளைஞர் சேனை அமைப்பின் தலைவர் எம்.சங்கீத் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணுசரனையுடன் இன்று (16) கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய கொடி, தமிழ் இளைஞர் சேனை அமைப்பின் கொடி, நந்திக்கொடி என்பன அதிதிகளால் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு, பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக்க, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், வைத்தியர் புஷ்பலதா லோகநாதன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், கல்முனை வடக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.வசந்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைத்தல், சேனையின் கீதம் இசைத்தல், கலை நிகழ்ச்சிகள், விசேட உரைகள் முதலியன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழர் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன், கல்முனை உவெஸ்லி உயர்தர மாணவர்களின் நடனமும் விழாவுக்கு அழகு சேர்த்திருந்தன.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எம்.ஏ.டக்ளஸ் உரையாற்றும்போது,
இந்து மக்கள் மாத்திரமல்லாது, மாவட்டத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகிறது. மதங்கள், இனங்கள் வேறாக இருந்தாலும், நாட்டை கட்டியெழுப்ப நாம் எல்லோரும் ஒரே மக்களாக செயற்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த என்னை பிரதம அதிதியாக அழைத்து இப்படியான ஒரு கௌரவத்தை வழங்கிய இந்நாளை என்னால் மறக்க முடியாது. இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.
வருடா வருடம் கல்முனை பிரதான நகரம் தைப்பொங்கல் தினத்தன்று அலங்கரிக்கப்பட்டு, தமிழர்களின் பாரம்பரிய கலாசார பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு.
ஆண்டுதோறும் மாட்டு வண்டிகள் ஊர்வலமாக சென்று, தைப்பொங்கல் திருவிழா இளைஞர்களால் கொண்டாடப்படுவது போல் இந்த ஆண்டும் இளைஞர் சேனை அமைப்பினரால் பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM