சமூகங்களின் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் விடத்தல் தீவு கிராமத்துக்கான வரலாற்று சிறப்பு வாய்ந்த வரவேற்பு வளைவு நேற்று (ஜன. 15) ஞாயிற்றுக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி விடத்தல் தீவு கிராமத்துக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள விடத்தல் தீவு கிராமத்துக்கான உள்நுழைவு வரவேற்பு வளைவே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
விடத்தல் தீவு கிராமத்தின் தனித்துவமான சிறப்புகளை மெருகேற்றும் வகையில் புலம்பெயர்ந்து வாழும் விடத்தல் தீவை சேர்ந்தோரின் நிதிப் பங்களிப்பின் ஊடாகவும், விடத்தல் தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும் இந்த வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழாவில் முதன்மை விருந்தினராக பொறியியலாளரும், மன்னார் தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளருமான சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கலந்துகொண்டதோடு, மதத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதானிகளும் பங்கேற்றனர்.
ஒன்றாக எழுந்து நின்று ஒற்றுமைக்கு பலம் சேர்க்குமிடத்து தீவின் மானிடம் மாண்புறும் என்ற வகையில் இவ்வைபவம் அமைந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM