சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 9ஏ பெறுபேறுகளை பெற்ற மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு சங்கத்தானை சாரதா சனசமூக நிலையத்தினர் தலா 50 ஆயிரம் ரூபாவை ஊக்குவிப்புத் தொகையாக வழங்கியுள்ளனர்.
சாவகச்சேரி சங்கத்தானை சனசமூக நிலையம் மற்றும் இளங்கோ பாலர் பாடசாலையின் இணைந்த ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு நேற்று (ஜன. 15) சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையான 50 ஆயிரம் ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் என். சர்வேஸ்வரன், ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன், வேல்ட் விஷன் நிறுவனத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் அழகுராஜா மற்றும் சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM