வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா' நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது, போட்டியாளர்கள் பல வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் செய்து, பறக்கவிட்டனர்.
இதில் உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்ற பட்டத்தினை செய்த ம.ஹாசன் என்பவர் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணம் பரிசாக வழங்கப்பட்டது.
அத்துடன் இவர் இந்த நிகழ்வில் 6ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, உழவு இயந்திரம், மரநடுகை திட்டத்தை போன்று பட்டம் அமைத்த ம. பிரசாந் என்பவர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.
இதில் மூன்றாம் இடத்தினை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்க்கள அரங்கம் போன்று பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னா என்பவர் பெற்றுக்கொண்டார்.
முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், பட்டப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM