அக்குறணைப் பிரதேசத்தில் வைத்து, வாகனம் ஒன்றினுள் இருந்த 5 இலட்ச ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட யப்பான் யென்களைத் திருடிய குற்றத்திற்காக கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-
அக்குறணை 7 ஆம் மைல் பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில் ஒருவர் வாகனம் ஒன்றை செலுத்தி வந்துள்ளார்.
அவரது மகன் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியவர். அவரது பணப்பை ஒன்று வாகனத்தில் காணப்பட்டுள்ளது.
வாகனத்தைச் செலுத்தியவர் தனது நண்பர் ஒருவரைக் கண்டு வாகனத்தை நிறுத்தி கதைத்துக் கொண்டிருந்துள்ளார்.
அவ்வேளை வாகனம் கொள்வனவு செய்யும் ஒருவர் அவ் வாகனத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது அங்குள்ள பணப்பையை கண்டு அதனை தந்திரமான முறையில் திருடியுள்ளார்.
பணத்தைப் பறி கொடுத்தவர் சி.சி.ரி.வி. யின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போது திருடியவர் இனம் காணப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை 125 000 ரூபாவுக்கு இலங்கைப் பணமாக மாற்றி அதில் 120 000 ரூபாயை தனது மனைவியிடம் கொடுத்துள்ளார்.
மேலும் மேற்கொண்ட சோதனையின் போது திருடப்பட்ட பணத்தின் மற்றும் ஒரு பகுதியும் வீட்டில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளது.
பணத்தை திருடிய குற்றத்திற்காகக் கணவனும், திருட்டுப் பொருளை உடன் வைத்திருந்த குற்றத்திற்காக மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அளவத்துகொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM