இரு மாடிக்கட்டிடத்தில் 5 காவல் நாய்களுடன் கசிப்பு உற்பத்தி : ஒருவர் கைது

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 10:35 AM
image

கட்டுகாஸ்தோட்டைப்  பொலிஸ் பிரிவில் இரு மாடிக்கட்டிடத்தில் 5 காவல் நாய்களுடன் கசிப்பு உற்பத்தி செய்த இடம் ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் படி மேற்படி சொகுசு மாடிக்கட்டிடத்தை முற்றுகை இடச் சென்ற போது வாயிற் கதவு முன் உயர் ரக வளர்ப்பு நாய்கள் ஐந்து உட்பிரவேசிக்க முடியாது குரைத்து இடையூறு செய்துள்ளன.

இருப்பினும் சில பொலிஸார் வீட்டுப் பாதுகாப்பு மதிலின் மீதேறி மற்றொரு பகுதியின் ஊடாக வீட்டினுள் உட்பிரவேசித்து சோதனையிட்டுள்ளனர். 

அப்போது 36 போத்தல்களில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு மற்றும் வடி சாராயத்தைக் கைப்பற்றியுள்ளனர். குறித்த கசிப்பு போத்தல்கள் அவ்வீட்டுனுள் தயார் படுத்தப்பட்டவை எனப் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவளை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை...

2025-02-16 11:27:20
news-image

360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ்...

2025-02-16 11:24:57
news-image

மியன்மார் இணையவழி மோசடி முகாமில் இருந்து...

2025-02-16 11:07:47
news-image

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட...

2025-02-16 10:55:45
news-image

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

2025-02-16 11:01:31
news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 11:02:59
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44