பொது இணக்கக் கொள்கையை முன்வைத்தால் அரசியல் தீர்வு ; பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயார் - மக்கள் விடுதலை முன்னணி

Published By: Digital Desk 5

13 Jan, 2023 | 12:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமும் முதலில் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

பொது இணக்க கொள்கையை முன்வைத்தால் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.வழங்கப்படும் தீர்வு அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதும் கிடையாது.

ஆனால் அரசியல் தீர்வு விவகாரம் என்பது  வெறும் ஏமாற்று நடவடிக்கைகளுக்காக மாத்திரம் காணப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 84 கூட்டங்கள் இடம்பெற்றன.இந்த 84 கூட்டங்களிலும் நாங்கள் கலந்துக் கொண்டு பல யோசனைகளை முன்வைத்தோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்,அரசியல் தீர்வு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன அரசியல் தீர்வு விவகாரத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்திலும்,பொது இடங்களிலும் தவறான கருத்துக்களை முன்வைத்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.இறுதியில் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துக் கொள்ளவில்லை.அரசியல் தீர்வு விவகாரம் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவதால் நாங்கள் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துக் கொள்ளவில்லை.

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது.

ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவும் முதலில் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து ,இணக்கப்பாட்டு கொள்கையை முன்வைத்தால் பேச்சுவார்த்தையில் தாராளமாக கலந்துக் கொள்ளலாம்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன.அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன்,ஆனால் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக இருந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை என தமிழ் தரப்பினர் மீது பழி சுமத்தி விட்டு ஜனாதிபதி சூட்சமமான முறையில் தப்பித்துக் கொள்வார்.இது அவரது அரசியல் தந்திரம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58