அறுவடை திருநாள் மரபுகள்!

Published By: Ponmalar

14 Jan, 2023 | 03:06 PM
image

உணவு தந்து நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும், சூரியனுக்கும், விவசாயிகள் நன்றி சொல்லும் தினமாக பொங்கல் வழிபாடு இருக்கிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’என்ற பழமொழி அதனால்தான் வந்தது. அறுவடை முடிந்ததும் புத்தரிசியில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு பொங்கல் பண்டிகைகளில் நன்றி சொல்வோம். அறுவடை தினத்தைக் கொண்டாடும் மரபு உலகெங்கும் உண்டு.

*ரோமானியர்கள் ‘செரிலியா’என்ற பெயரில் அறுவடை தினத்தினை கொண்டாடுகிறார்கள். பழங்காலத்தில் அங்கு நடை பெற்ற திராட்சை விவசாயத்தை நினைவுபடுத்தும் வகையில் நடைபெறும் விழா இது. இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செய்யவே இந்த விழாவினை இன்றும் கடைப்பிடித்து நடத்துகின்றனர் ரோமானியர்கள்.

*நம்மைப் போல ஜப்பானியர்களும் நெல் புனிதமானது. அவர்களும் நெல் அறுவடை முடித்து, அறுவடைத் திருவிழா கொண்டாடுகிறார்கள். திருவிழா நாள் வரை புதிதாக விளைத்த நெல் அரிசியை யாரும் உண்ண மாட்டார்கள்.

*அமெரிக்கப் பழங்குடியினர்கள் ‘கிரீன் கார்ன் பெஸ்டிவல்’ என்ற பெயரில் சோளம் அறுவடை முடிந்ததும் விழா எடுக்கின்றனர். நல்ல விளைச்சல் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழா இது.

*சீனர்கள் நெல் மற்றும் கோதுமை அறுவடைக்கு பிறகு விழா கொண்டாடுகின்றனர். இவ்விழாவின் போது ‘மூன் கேக்’ என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து உண்பார்கள். குடும்பத்துடன் இணைந்து இரவில் ‘நிலாவைப் பார்த்தல்’ சடங்கு தான் இந்த மூன் கேக் திருவிழா. அறுவடை எவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறதோ அதேபோல் அந்த தினத்தில் நிலா மற்ற நாட்களை விட மிகப் பெரிய வடிவில் காட்சியளிக்கும். அன்று முட்டை, இறைச்சி, தாமரை விதை அனைத்தும் கேக்கினுள் ஸ்டப் செய்து சமைக்கப்படும். அதைத்தான் அவர்கள் மூன் கேக் என்கிறார்கள்.

*வியாட்நாமில் ‘ரெட் திரங்து’ என்ற பெயரில் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. வயலில் உழைத்த பெற்றோர்கள், அறுவடைக்குப் பிறகு தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அறுவடை விழா.

*ஜெர்மனி நாட்டின் மலைகளில் மேய்ச்சல் முடித்து விட்டு, மேய்பவர்கள் தங்கள் ஆடு, மாடுகளுடன் வீடு திரும்பும் நாள் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அது கால் நடைகளுக்கு நன்றி சொல்லும் விழா. இங்கு திராட்சை விளைச்சலைக் கொண்டாடி அறுவடைத் திருவிழா நடக்கிறது.

*மலேசியாவில் நெல் விளைச்சலுக்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களால் நெல்லை அறுவடை செய்து, வயல் வெளிகளில் கூடி இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

*எகிப்து மக்கள் அறுவடைத் திருவிழாவில் நல்ல விளைச்சல் தந்த ‘மின்’ என்ற கடவுளை வழிபடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று ஸ்ரீராம நவமி விரதம்

2023-03-30 21:40:01
news-image

பொகவந்தலாவையில் 35 ஆவது வருடமாக நிகழ்த்தப்படும்...

2023-02-19 19:06:52
news-image

மகத்துவங்கள் நிறைந்த மஹா சிவராத்திரி

2023-02-18 11:40:35
news-image

'மஹா சிவராத்திரி' காணும் திருக்கேதீச்சரத்தானே போற்றி! 

2023-02-16 16:56:52
news-image

சிவபெருமானின் சிவ ரூபங்கள்...

2023-02-15 17:15:22
news-image

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்...

2023-02-08 21:08:52
news-image

ஆன்மிக பாதையில் அன்னதானத்தின் மகத்துவம்!

2023-02-07 17:28:48
news-image

இன்று தைப்பூசம்: முருக பக்தர்களின் போற்றுதற்குரிய...

2023-02-05 15:57:19
news-image

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ்...

2023-01-30 11:34:37
news-image

ஈமச் சடங்கு...!

2023-01-28 16:35:14
news-image

முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து...

2023-01-20 21:35:30
news-image

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது -...

2023-01-20 11:08:18