இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மன்னாரில் ஆதரவாளர்களுடன் சந்திப்பு

Published By: Nanthini

13 Jan, 2023 | 11:31 AM
image

லங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு நேற்று வியாழக்கிழமை (12) மாலை விஜயம் செய்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான இக்கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாடு, மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். 

இத்தேர்தல் பல அரசியலமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடும் இடம்பெற வேண்டும்.

இத்தேர்தல் ஏற்கனவே உள்ள நடைமுறையோடு, மக்கள் மத்தியில் பல குறைபாடுகள், ஆட்சி நடத்த முடியாத நிலை, வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவுக்கு ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்ற வகையில், ஆளுந்தரப்பில் வெற்றி பெற்று, பதவியை பெற்றிருந்தாலும் எதிர்த்தரப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

இதில் இன்னும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் கூறியபோதும் அதற்கான திருத்தங்களை இன்னும் செயற்படுத்தவில்லை.

தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில், அவர்களது செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்னால் அந்த செயற்குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்திருக்கிறோம்.

ஏற்கனவே பெற்ற பெறுமானங்களை கொண்டு ஆட்சி நடத்த முடியாத நிலையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும், அனுபவங்களை பெற்றிருந்த போதிலும், இப்போது தமிழரசுக் கட்சி ஒரு புதிய நடைமுறை வெற்றியை, அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நடைமுறையினை பிரேரித்துள்ளது. 

அதைப் பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ கட்சிகளுடன் நாங்கள் விவாதித்துள்ளோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40